ஏணிகள் முன்னேற விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது

முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம்

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் .எனது பெயர் ஏணி (புனைபெயர்தான் ) இந்த தளத்தின் முக்கிய விஷயங்கள் மூன்று :கல்வி ,தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம். ஏன் இந்த மூன்றும் ..? (மத்ததெல்லாம் தான் நம்ம தமிழ் பிளாகர்கள் எழுதீட்ராங்களே). நமது இந்தியாவின் இளைஞர்களின் இளைஞர்,'கனவு'நாயகர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் லட்சியமான 2020 இந்திய வல்லரசு நாடாக (நல்லரசு நாடானால் இன்னும் நல்லாருக்கும் ) வேண்டுமெனில் இந்த மூன்றும் தான் முக்கிய தேவை .எனவேதான் இந்த தளத்தில் இவற்றைப்பற்றி பதிவு செய்யவுள்ளேன் .நிறை குறைகளை பதிவு செய்யுங்கள் .நன்றி

Wednesday, July 15, 2009

இந்தியா ஒரு யானை .


சில வருடங்களுக்கு முன் அதாவது நமது சுதந்திர பொன்விழா நடந்துகொண்டிருந்த ஆண்டில் வாசிங்க்டன் போஸ்ட் எனும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் கீழ்க்கண்ட செய்தி பிரசுரமாகியிருந்தது ;

'இந்தியா திடீரென்று ட்ராகனாகவோ ,புலியாகவோ மாறாது ,மாறவும் அதனால் முடியாது .ஏனெனில் இந்தியா ஒரு யானை ,மிகுந்த நினைவாற்றல் கொண்டது ,அபார பலம பொருந்தியது ,ஆனால் வேகம் மட்டும் சற்றே குறைவானது எனினும் லட்சியம் உறுதியாக கொண்டது .ஒரு முறை தனது லட்சியத்தை நோக்கி நகர ஆரம்பித்தால் நிச்சயம் லட்சியத்தை அடையும் வரை எவராலும் அதனை தடுக்க முடியாது ..அப்படிப்பட்ட யானை இப்போது நகர ஆரம்பித்துவிட்டது .'

இந்த செய்தியின் மூலம் நமக்கு விளங்குவது என்னவெனில் , இந்தியா நிச்சயம் மிகப்பெரிய சாதனை நாடாக மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தான் .இதைப்பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும் .

0 comments: